Simbu's Promise To Parents

பெற்றோருக்கு சிம்புவின் வாக்குறுதி!
சினிமா உலகில் நடிகர்-நடிகைகள் காதலித்து கல்யாணம் செய்து கொள்வதும், பின்னர் ஓரிரு வருடங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெறுவதும் பரவலாக நடந்து வருகிற விசயமே. அதேசமயம், அஜீத்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா உள்ளிட்ட சில நட்சத்திர ஜோடிகள் சிறப்பாக வாழ்ந்தும் வருகிறார்கள்.

அந்த வகையில், இப்போது ஹன்சிகாவை காதலிப்பதாக அறிவித்திருக்கிறார் சிம்பு. ஆனால், இந்த காதல் சம்பந்தமாக பெற்றோரிடம் சம்மதம் வாங்க ஆறு மாதமாக போராடி வந்தாராம். ஏற்கனவே அவர் காதலில் தோல்வியடைந்தவர் என்பதால், மீண்டும் ஒரு நடிகையின் பெயரை சொன்னபோது பெற்றோர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தார்களாம்.

ஆனால், ‘‘உண்மையான காதலாக இருந்தால் உயிரை கொடுத்தாவது சேர்த்து வைக்கிறவன்தான் இந்த ஜெயின் ஜெயபால்‘‘ என்று சினிமாவில் சொடக் போட்டு டயலாக் பேசிய டி.ஆர்., சிம்பு-ஹன்சிகாவுக்கிடையே உண்மையான காதல் இருந்ததை கண்டறிந்தபோது அதற்கு பச்சைக்கொடி காண்பித்தாராம். அதனால்தான் அவர்கள் இந்த தகவலை வெளியிடும் முன்பே, சிம்பு, ஹன்சிகாவை காதலித்தாலும் சேர்த்து வைப்பேன் என்று ஒரு பேட்டியில் முன்மொழிந்திருந்தார் டி.ராஜேந்தர்.

ஆக, இப்போது சிம்பு-ஹன்சிகா இருவருமே காதலை உலகறிய தெரிவித்து விட்டனர். இந்த நேரத்தில், பெற்றோருக்கு இன்னொரு வாக்குறுதியும் அளித்துள்ளாராம் சிம்பு. அதாவது, ‘‘தல அஜீத்தின் தீவிர ரசிகனான நான், அவரும், ஷாலினியும் வாழ்வது போல், ஹன்சிகாவுடன் நானும் மற்றவர்கள் பொறாமைப்படுகிற அளவுக்கு வாழ்ந்து காட்டுவேன்’’ என்று கூறியிருக்கிறாராம். ஹன்சிகாவும் இதற்கு வழிமொழிந்துள்ளாராம். 
Source : Dinamalar


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com