“பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” நடிகர் சிம்பு பேட்டி


மைக்கேல் ராயப்பன் புகாருக்கு “பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” நடிகர் சிம்பு பேட்டி அளித்துள்ளார்.


திரைப்பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் குறித்து நடிகர் சிம்புவிடம், ‘தினத்தந்தி’ நிருபர் கேட்டார். சிம்பு கூறியதாவது:- 

“ஒரு படம் தயாரிப்பில் இருக்கும்போது, அந்த படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும்போது, என் மீது யாராவது புகார் கொடுத்தால், அதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். ஒரு படத்தில் நடித்து முடித்து அது திரைக்கும் வந்த பிறகு என் மீது கொடுக்கப்பட்டிருக்கும் புகாருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

என்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் யாராக இருந்தாலும், அவர்களை பற்றி நான் தப்பாக பேச மாட்டேன்.” இவ்வாறு சிம்பு கூறினார்.

PUBLISHED IN DAILYTHANTHI DAILY TAMIL NEWS PAPER DATED 1-DECEMBER-2017

0 Comments:


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com