சிம்பு தான் என் குரு: சந்தானம் பெருமிதம்

எனக்கு முதல்பட வாய்ப்பு கொடுத்த சிம்பு தான் எனது குரு என்று கொமெடி நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.


கொமெடியில் நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு என பல முன்னோர்களையும் கலந்துகட்டி கலக்கிக் கொண்டிருக்கிறார் நடிகர் சந்தானம்.


அவர் அளித்துள்ள பேட்டியில், நகைச்சுவை நடிகர்கள் என்.எஸ். கிருஷ்ணன், தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், சோ, சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ், வடிவேலு உள்ளிட்டோர் மிகப்பெரிய லைப்ரரி என்றும், அவர்களைப் பார்த்துதான் தினம் தினம் படித்து புதிது புதிதாக காமெடி செய்வதாகவும் கூறியுள்ளார்.சினிமா உலகில் உங்களது குரு யார் என்று கேட்டால் சட்டென்று சிம்பு தான் என் குரு என்று பதில் அளிக்கிறார் சந்தானம்.


ஏன் என்று கேட்டால், சிம்புதான் எனக்கு முதல் பட வாய்ப்பு கொடுத்தார். அவர் கொடுத்த வாய்ப்பு தான் என்னுடைய வளர்ச்சிக்கு அஸ்திவாரம் ஆகி விட்டது. எனவே அவர் தான் என்னுடைய குரு, என்று பெருந்தன்மையுடன் கூறுகிறார்.


source : srilankan tamil magazine

1 Comments:

tapasya said...

Nandri nenachu paakravanga ........ vaazhkaiyil saathi paanga .......... Santhanam is the TOP comedian TODAY - but still he has the GRATITUDE towards his GURU ( STR ) ....... Happy to hear tis ......... In midst of ppl - who keep pin-pointing mistakes with STR, Sandhanam has proved his Gratitude ...... Hard to find ppl with such GOOD attitude ....... STR has earned some REALLY GOOD HEARTED PPL ......... The Process might be slow .... but will LAST-LONG !!! Proud to be a STR Fan !!!


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com