How Can I Return To Simbu - Santhanam

சிம்புவின் நன்றிக்கடனை எப்படி தீர்க்கப்போகிறேனோ தெரியவில்லை-சந்தானம்!
லொள்ளு சபா பேச்சாளராக இருந்தவர் நடிகர் சந்தானம். அப்போது தனது மன்மதன் படத்துக்கு ஒரு காமெடி நடிகர் தேடி வந்த சிம்பு, பல எதிர்ப்புகளை மீறி அதில் சந்தானத்தை நடிக்க வைத்தார். அதோடு விட்டுவிடாமல், தான் அடுத்தடுத்து நடித்த வல்லவன், சிலம்பாட்டம் என பல படங்களில் தொடர்ந்து சந்தானத்துக்கு சான்ஸ் கொடுத்து அவரை மக்களுக்கு தெரியவைத்தார். அதன்பிறகுதான் தனித்துவமான காமெடியனாக வளர்ந்தார் சந்தானம். 

இப்போது சந்தனம் இல்லாத கல்யாண வீடு இல்லாததுபோல், சந்தானம் இல்லாத சினிமா இல்லை என்கிற அளவுக்கு எல்லா படத்திலும் அவர் இருக்கிறார். அவர் படத்தில் இருந்தால் வியாபாரம் கியாரண்டி என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இப்படி தான் வேகமாக வளர்ந்து விட்டபோதும், தன்னை வளர்த்து விட்ட சிம்பு மறக்காமல் இருக்கிறார் சந்தானம். 

இதுவரை சிம்புவுக்கென்று நான் எதையும் செய்ததில்லை. ஆனால் அவர் என்னை இன்றைக்கு உலகம் தெரிந்த ஒரு நடிகனாக்கியிருக்கிறார். இந்த பிறவியில் அவர் எனக்கு செய்த நன்றிக்கடனை நான் எப்படி தீர்க்கப்போகிறேன் என்றே தெரியவிலலை என்று சொல்லும் சந்தானம், நான் எத்தனை படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், அந்த நேரத்தில் திடீரென்று அழைத்து என்னிடம் சிமபு கால்சீட் கேட்டால்கூட அவர் கேட்ட தேதியில் கால்சீட் கொடுத்து நடிப்பேன். இதறகாக மற்ற படாதிபதிகள் என்னை கோபித்துக்கொண்டாலும் அதைப்பற்றி கவலைப்படமாட்டேன் என்கிறார்.
SOURCE : DINAMALAR


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com