பல போராட்டங்களுக்கு இடையே வெளியானது சிம்பு நடித்திருக்கும் ‘மாநாடு’ படம். இறுதிநேரத்தில்கூட படம் வெளியாகுமா என்ற சந்தேகத்துடன் இருந்தனர் சிம்புவின் ரசிகர்கள். அவர்களை மகிழ்விக்கும் விதத்தில் அரசியல் கலந்த
‘திரில்லர்’ படமாக வெளியானது ‘மாநாடு’. படத்தைப் பார்த்த ரசிகர்கள் வலைத்
தளங்கள் முழுவதும் ‘மாநாடு’ பற்றிய செய்திகளைப் பகிர்ந்துள்ளனர்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாகவும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
2019லேயே இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டு, சிம்பு ரசிகர்களின்
ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால், மற்ற படங்களைப்போல் கொரோனா, ஊரடங்கு உள்ளிட்ட பல காரணங்களால் படத்தின் வேலைகள் தள்ளிப்போனது.
ஒரு வழியாக போராடி இந்த ஆண்டு துவக்கத்தில் படப்பிடிப்பை முடித்தனர். படப்பிடிப்பு முடிந்தும் பல்வேறு காரணங்
களால் படம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. அதேசமயம், எவ்வளவு
தாமதமானாலும் ‘மாநாடு’ படத்தைத் திரையரங்கில்தான் வெளியிடுவோம் என படக்குழு உறுதியாக இருந்தது.
பிரச்சினைகள் தீர்ந்து, ‘மாநாடு’ படம் வெளியாவது உறுதி என தகவல் வெளியானது முதலே வலைத்தளங்களில் எங்கு பார்த்தாலும் ‘மாநாடு’ சுவரொட்டி, காணொளி, கருத்து என சிம்பு ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகிறார்கள்.
நவம்பர் 25, பிறகு 27 என்று அறிவிப்பு வெளியானது. டிக்கெட் பதிவு ஒரு பக்கம் நடந்து வந்தாலும் வெளியீட்டுத் தேதி
தெரியாமல் ரசிகர்கள் குழம்பினர்.
இறுதியாக 26ஆம் தேதி காலை 7 மணிக்கு ‘மாநாடு’ திரையரங்குகளில் திரையிடப்பட்டு அனைத்து தரப்பினரிடமும் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
படத்தின் இரண்டாம் பாதி அனைவரையும் இருக்கையின் நுனியில் அமர வைக்கிறது என்று பலர் பாராட்டியிருக்கின்றனர். இதற்
கிடையே ஆரம்பக் காட்சியின் காணொளியை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை
கிளப்பினார் பிரேம்ஜி அமரன்.
“படத்தின் துவக்கத்தில் வரும் காட்சிகள் பெரிதும் அழுத்தமில்லாமலேயே நகருகின்றன. ஆனால் கதைக்குள் செல்லச் செல்ல படம் விறுவிறுப்பாகிறது. ‘டைம் லூப்’
என்பதால் சில காட்சிகளைத் திரும்பத் திரும்ப பார்க்க வேண்டியிருக்கிறது.
“முதல் முறை ஒரு காட்சி வரும்போது அதில் காட்சிக்கு சம்பந்தமில்லாமல் சில
விஷயங்கள் நடக்கின்றன.
ஆனால் திரும்ப
அந்தக் காட்சி காட்டப்படும்போதுதான்
முதலில் சம்பந்தமில்லாததாக நாம் நினைத்தது படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்று உணர முடிகிறது. வெங்கட் பிரபுவின் புத்திசாலித்தனமான எழுத்து நிறைய இடங்களில் படத்தைச் சுவாரசியமாக்கியுள்ளது,” என்றார் சிம்பு ரசிகர்.
இந்தப் படத்தில் அப்துல் காலிக் மற்றும் தனுஷ்கோடி என்ற இரண்டு கதாபாத்திரங்
களைச் சுற்றித்தான் கதை நகருகிறது.
அப்துல் காலிக்காக சிம்புவும் தனுஷ்கோடியாக எஸ்.ஜே. சூர்யாவும் நடித்துள்ளார்கள்.
இருவரும் போட்டிபோட்டு நடித்துள்ளார்கள்.
தான் ஒரு கைதேர்ந்த நடிகர் என்பதை சிம்பு மீண்டும் நிரூபித்திருக்கிறார். குறிப்பாக உணர்வுபூர்வமான காட்சிகளில் அவரது நடிப்பு தத்ரூபமாக இருந்தது. விரல் வித்தையை ஓரம் வைத்துவிட்டு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்ததற்கு அவரைப் பாராட்டி உள்ளார்கள்.
தனுஷ்கோடி என்ற எதிர்மறை வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா. இதற்காகவே இவ்வளவு நாள் காத்திருந்தேன் என்பதுபோல ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். நக்கல் கலந்த பாணியில் அவர் செய்யும் வில்லத்தனம் படத்தை சுவாரசியப்படுத்தியிருக்கிறது என்கின்றனர்.
‘மாநாடு’ படத்திற்கு கிடைத்துள்ள
வரவேற்பு, திரையுலகையே மிரள வைத்திருக்கிறது என்கிறது கோலிவுட்.
மாநாடு படத்தில் நடித்திருக்கும் கல்யாணி பிரியதர்ஷனுடன் சிம்பு.
PUBLISHED IN SINGAPORE TAMILMURASU DAILY TAMIL NEWSPAPER DATED 27.11.2021
0 Comments:
Post a Comment